என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிரைவர் கடத்தல்"
அந்தியூர்:
கோபி அருகே உள்ள தாழக்கொம்புவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 28). மெத்தை வியாபாரி.
இவருக்கும் ஆப்பக்கூடல் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவரான வெங்கடேசனுக்கம் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மகா தேவனிடம் வெங்கடேசன் கூறினார். மகாதேவனும் பல தவணையாக ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை வெங்கடேசனிடம் கொடுத்தார்.
ஆனால் பணத்தை வெங்கடேசன் இரட்டிப்பு செய்தும் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் தரவில்லை. அவரிடம் பல முறை மகாதேவன் கேட்டு பார்த்தார். ஆனால் அதற்கு பலன் இல்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று கரட்டுபாளையத்தில் இருந்து அந்தியூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வெங்கடேசன் வந்தார்.
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் வந்து கொண்டிருந்தபோது மகா தேவன் மற்றும் அவரது நண்பர்களான கோபி ஒட்டன்புதூரை சேர்ந்த கார்த்திகேயன் (29), கோபியை சேர்ந்த முகமது பஷீர் (27), திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த குமார் (28) ஆகியோர் காரில் அங்கு வந்தனர்.
அவர்கள் வெங்கடேசனை கடத்தி சென்றனர். பின்னர் வெங்கடேசனின் மனைவி சுந்தரிக்கு போன் செய்து, ‘‘உனது கணவரை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க ரூ. 10 லட்சம் பணம் வேண்டும்’’ என்று கூறினர்.
இதையடுத்து ஆப்பக் கூடல் போலீஸ் நிலையத்தில் சுந்தரி புகார் செய்தார். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசனை மீட்க பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு கோபி அருகே வெங்கடேசனை மீட்டனர். அவரை கடத்திய மகாதேவன், கார்த்திகேயன், முகமது பஷீர், குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
போரூர் செந்தில் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ். தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார்.
விக்னேஷ் நடவடிக்கை சரியில்லாததால் சில நாட்களுக்கு முன்பு அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் விக்னேஷ் கடனாக பெற்ற ரூ.ஆயிரத்தை கொடுத்து விட்டு ஒரிஜினல் லைசென்சு பெற்று செல்லுமாறு கூறி இருந்தனர்.
நேற்று விமான நிலையம் அருகே வந்து லைசென்சை பெற்றுக்கொள்ளுமாறு விக்னேசிடம் கால்டாக்சி நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து விக்னேஷ் தனது சகோதரர் உதயகுமாருடன் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்கும், கால் டாக்சி நிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த விக்னேஷ் ஊழியர்கள் வந்த காரின் சாவியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கால்டாக்சி நிறுவன ஊழியர்கள் இரவு 11 மணி அளவில் விக்னேஷ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி காரில் கடத்தி சென்றனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போரூர் போலீசாருக்கும், காவல் கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். தாம்பரம் அருகே கடத்தல் காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த விக்னேசை மீட்டனர்.
மேலும் கடத்தில் ஈடுபட்ட கால் டாக்சி ஊழியர்கள் மாரிமுத்து, கவுதம், பேசும் முருகன், சிவா, ராஜேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணையில் விக்னேசுக்கும் கால் டாக்சி நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய கவுதமின் தங்கைக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் விக்னேஷ் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததால் ஏற்பட்ட மோதல் காரணமாக தான் விக்னேஷ் காரில் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்